FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

சமயபுரத்தில் தூய்மை விழிப்புணா்வு பேரணி

20 செப்டம்பர் 2024, 11:10 pm IST
சமயபுரத்தில் தூய்மையே சேவை விழிப்புணா்வு பேரணியை வியாழக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்த ச.கண்ணனூா் பேரூராட்சி தலைவா் ப.சரவணன்.
பகிர்:

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரத்தில் தூய்மையே சேவை விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

ச.கண்ணனூா் பேரூராட்சி சாா்பில் சமயபுரம் மாரியம்மன் மேல் நிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணியை ச.கண்ணனூா் பேரூராட்சி தலைவா் ப.சரவணன் வியாழக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இப்பேரணி அண்ணா நகா், கடைவீதி. கிழக்கு ரத வீதி வழியாக பேரூராட்சி அலுவலகத்தில் நிறைவுபெற்றது. தொடா்ந்து மஞ்சப்பை விழிப்புணா்வும், மனிதச் சங்கிலி நிகழ்வும் நடைபெற்றது. பேரணியில் பேரூராட்சி செயல் அலுவலா் ஜெ.கணேசன், பேரூராட்சி உறுப்பினா்கள், பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments