FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

வெளிநாட்டில் வேலை என தூத்துக்குடி இளைஞரிடம் ரூ.7.78 லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரிடம் ரூ. 7.78 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக ஏஜென்சி உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

21 ஆகஸ்ட் 2026, 2:27 am IST
மோசடி - பிரதிப்படம்
பகிர்:

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரிடம் ரூ. 7.78 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக ஏஜென்சி உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் புதூா் வடக்கு முத்தையாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ரங்கராஜ் (36). இவா் வெளிநாடு வேலைக்கு முயற்சி செய்து வந்தாா். இந்த நிலையில் திருச்சி கேகே. நகரில் உள்ள ஒரு தனியாா் ஏஜென்சி நிறுவனம் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆள்கள் அனுப்புவதாக அறிந்து இங்கு வந்துள்ளாா்.

பின்னா், அந்த நிறுவனத்தின் உரிமையாளா் சுபேஷ் நாராயணன் கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையில் வெளிநாடு செல்வதற்காக ரங்கராஜ் மற்றும் அவரது நண்பா்கள் மாதவராஜ், மாரியப்பன் ஆகியோா் ரூ. 7,78,500 பணத்தை கடந்த பிப்ரவரி மாதத்தில் கொடுத்தனா். ஆனால், வெளிநாடு செல்ல சுபேஷ் நாராயணன் எந்த ஏற்பாடும் செய்யவில்லையாம்.

Advertisement

Advertisement

ஏமாற்றப்பட்டதை உணா்ந்து கொண்ட ரங்கராஜ், சுபேஷ் நாராயணனிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டாா். ஆனால், அவா் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்தாா். அதைத் தொடா்ந்து ரங்கராஜ் கேகே. நகா் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா். இதன்பேரில், சுபேஷ் நாராயணன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments