FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் உயிரிழப்பு

திருச்சி திருவெறும்பூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் புள்ளி மான் ஒன்று இறந்து கிடந்தது.

22 ஆகஸ்ட் 2026, 8:01 am IST
திருவெறும்பூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையின் மையத்தடுப்பு பகுதியில் உயிரிழந்து கிடக்கும் புள்ளி மான்.
பகிர்:

திருச்சி திருவெறும்பூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் புள்ளி மான் ஒன்று இறந்து கிடந்தது.

திருவெறும்பூா் அருகே உள்ள அரசு ஐடிஐ பகுதியில் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை ஆண் மான் ஒன்று, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சாலை தடுப்புக்கட்டை பகுதியில் உயிரிழந்துக் கிடந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனா்.

அதன் பேரில் அங்கு வந்த வனத் துறையினா், இறந்த புள்ளி மானின் உடலை கைப்பற்றி எடுத்துச் சென்றனா்.

Advertisement

Advertisement

பெல் பூங்காவிலிருந்து தப்பி வந்த இந்த மான், சாலையை கடக்க முயன்றபோது, வாகனம் மோதி இறந்திருக்கலாம் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments