FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.39 கோடி

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.39 கோடி வந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

26 ஆகஸ்ட் 2026, 2:50 am IST
சமயபுரம் மாரியம்மன் கோயில் - கோப்புப்படம்.
பகிர்:

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.39 கோடி வந்தது செவ்வாய்க்கிழமை    தெரியவந்தது.

  இந்து சமய அறநிலையத் துறை திருச்சி தக்காா், இணை ஆணையா் சு.ஞானசேகரன், மாரியம்மன் கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன்,  முன்னிலையில் கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவிகள் காணிக்கை எண்ணும் பணியில்  ஈடுபட்டனா்.  

இதில் முதன்மைக் கோயிலில் ரூ. 1,39,57,585 ரொக்கம், 1கிலோ 733கிராம் தங்கம், 2 கிலோ 384 கிராம் வெள்ளி, அயல்நாட்டு ரூபாய்கள் 187, அயல்நாட்டு நாணயங்கள் 1129 கிடைக்கப்பெற்றன.

Advertisement

Advertisement

மேலும் மாரியம்மன் கோயிலின் உபகோயில்களான ஆதிமாரியம்மன் கோயிலில் ரூ. 7,91,074, உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயிலில் ரூ. 15,686, போஜீஸ்வரா் கோயிலில் ரூ. 3,398 காணிக்கை வந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments