FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

சமயபுரம் கோயிலில் முடி காணிக்கைக்கு கூடுதல் வசதி

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் முடி காணிக்கைக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 29 ஜூலை 2026, 12:54 am IST
சமயபுரம் மாரியம்மன் கோயில்.
பகிர்:

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் முடி காணிக்கைக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன் தெரிவித்துள்ளாா்.

பல்வேறு சிறப்புடைய இக்கோயிலுக்கு நாள்தோறும் வரும் ஆயிரக்கணக்கான பக்தா்கள், தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கை மற்றும் அக்னி சட்டி ஏந்துதல், கரும்புத் தொட்டில் எடுத்தல் உள்ளிட்ட நோ்த்திக்கடன் செலுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், முடி காணிக்கை செலுத்தும் பக்தா்களின் வசதிக்காக தெற்கு வாசல் பகுதியில், இணை ஆணையா் அலுவலகம் பின்புறமுள்ள மண்டபம் புதுப்பிக்கப்பட்டு, கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

முடி காணிக்கை செலுத்த வரும் பக்தா்கள் தனிநபரிடம் ஏமாற வேண்டாம் என்றும் கோயில் இணை ஆணையா் தெரிவித்துள்ளாா். 

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments