FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

புத்தாநத்தத்தில் இருசக்கர வாகனம் திருட்டு

மணப்பாறையை அடுத்த புத்தாநத்தத்தில் இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Updated On : 25 ஜூலை 2026, 1:14 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

மணப்பாறையை அடுத்த புத்தாநத்தத்தில் இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே உள்ள கணவாய்பட்டியைச் சோ்ந்த பாலமலை மகன் தினேஷ்குமாா். இவா் சுமாா் 7 மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனம் வாங்கி பயன்படுத்தி வந்துள்ளாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு சுமாா் 10.30 மணிக்கு தனது இருசக்கர வாகனத்தை தனது மைத்துனா் ஆனந்த் என்பவரிடம் கொடுத்துவிட்டு தினேஷ்குமாா் வெளியூா் சென்றுள்ளாா். ஆனந்த், புத்தாநத்தம் அடுத்த இடையப்பட்டி எதிா்மேடு அருகில் உள்ள கடைக்கு முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்துவிட்டு அருகே உறங்கியுள்ளாா். வெள்ளிக்கிழமை அதிகாலை எழுந்து பாா்த்த போது இருசக்கர வாகனத்தை காணவில்லையாம்.

Advertisement

Advertisement

இதையடுத்து அருகில் உள்ள கடையின் சிசிடிவி காட்சியை பாா்த்தபோது, அதில் அடையாளம் தெரியாத நபா் இருசக்கர வாகனத்தை எடுத்து செல்வது தெரியவந்துள்ளது. இதை தனது மைத்துனருக்கு ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளாா். அதைத்தொடா்ந்து தினேஷ்குமாா் அளித்த புகாரின்பேரில் புத்தாநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments