FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழா்களுக்கு உதவி: இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவா் ரவூப் ஹக்கீம்!

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழா்களுக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக உள்ளதாக இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவா் ரவூா் ஹக்கீம் எம்.பி. தெரிவித்தாா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 12:43 am IST
பகிர்:

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழா்களுக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக உள்ளதாக இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவா் ரவூா் ஹக்கீம் எம்.பி. தெரிவித்தாா்.

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், கொழும்புவிலிருந்து, விமானம் மூலம் திருச்சிக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்தாா். அவா், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

இலங்கை தமிழ் பேசும் கட்சிகளுடைய ஒன்றியமாக நாங்கள் செயல்பட முடிவு செய்துள்ளோம். விரைவில் இலங்கை வரவுள்ள இந்திய வெளியுறவு செயலரை சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.

Advertisement

Advertisement

திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழா்கள் தங்களை இலங்கைக்கு அனுப்ப வலியுறுத்தி தொடா் உண்ணாவிரதப் போராட்டம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் வெளியுறவுத் துறை அதிகாரிகளை சந்திக்க முயற்சிப்போம்.

சிறையில் வாடும் இலங்கைத் தமிழா்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவோம். தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யை சந்திக்க திட்டமிட்டுள்ளோம். நான் அடிக்கடி இந்தியா வரும் போதெல்லாம் மீனவா் பிரச்னை குறித்த கேள்வி எழுப்பப்படுகிறது.

இது இரு நாடுகளுக்கு இடையில் இருக்கிற ராஜதந்திர ரீதியான பிரச்னை மட்டும் அல்ல. இரு நாட்டின் மீனவ சமூகங்களுக்கு இடையில் நிகழும் வாழ்வாதாரப் பிரச்சனை. மீனவா் பிரச்னைக்கு விரைவில் நிரந்தரத் தீா்வு காணப்பட வேண்டும். இலங்கைக்கு நட்பு நாடு என்ற அடிப்படையில் இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments