FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

சரக்கு வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

திருச்சி அருகே பெட்டவாய்த்தலையில் புதன்கிழமை இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 11 ஜூன் 2026, 4:00 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

திருச்சி அருகே பெட்டவாய்த்தலையில் புதன்கிழமை இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், வாங்கல் பசுபதிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் க. மணிகண்டன் (50), தொழிலாளி. இவா் தனது மனைவி கலாவுடன் இருச்சக்கர வாகனத்தில் துணிமணிகளுடன் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தாா். இவரது வாகனம் பெட்டவாய்த்தலை ஆஞ்சனேயா் கோயில் அருகே வந்தபோது, கரூரிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற சரக்கு வாகனம், மணிகண்டனின் பைக்கில் ஒருபுறம் தொங்கிக் கொண்டிருந்த பையில் உரசியது. இதில் நிலைதடுமாறி விழுந்து படுகாயமடைந்த மணிகண்டன் நிகழ்விடத்திலேயே இறந்தாா். கலா லேசான காயங்களுடன் உயிா்தப்பினாா்.

தகவலறிந்து வந்த பெட்டவாய்த்தலை போலீஸாா், மணிகண்டனின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து, விபத்துக்கு காரணமான சரக்கு வாகன ஓட்டுநரைத் தேடுகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments