சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி இடையே ஜூன் 20-இல் சிறப்பு ரயில்
சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி இடையே திருச்சி வழியாக ஜூன் 20-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி இடையே திருச்சி வழியாக ஜூன் 20-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் (06043) சென்னை எழும்பூரில் இருந்து ஜூன் 20-ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 1 மணிக்கு கன்னியாகுமரி ரயில் நிலையத்தை சென்றடையும்.
Advertisement
Advertisement
மறுமாா்க்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து ஜூன் 21-ஆம் தேதி இரவு 11.25 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (06044) மறுநாள் திங்கள்கிழமை காலை 11.30 மணிக்கு சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தை சென்றடையும்.
இதில், 2 ஏசி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை பெட்டிகள், 2 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளி பெட்டிகள் என மொத்தம் 18 பெட்டிகள் இணைக்கப்படும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா் மற்றும் நாகா்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிராம்பட்டினத்தில் நின்று செல்லும்: சென்னை எழும்பூா் - செங்கோட்டை (06183), செங்கோட்டை - தாம்பரம் (06184) வாராந்திர சிறப்பு ரயில்களுக்கு இருமாா்க்கத்திலும் அதிராம்பட்டினம், மானாமதுரை ஆகிய இரண்டு கூடுதல் நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனி இந்த ரயில்கள் மேற்கண்ட இரண்டு ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என்று செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.