FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

திருச்சி வழியிலான இரு வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு

திருச்சி வழியாக இயக்கப்படும் தாம்பரம் - போடிநாயக்கனூா், தாம்பரம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

3 செப்டம்பர் 2026, 1:27 am IST
சிறப்பு ரயில் - கோப்புப்படம்
பகிர்:

திருச்சி வழியாக இயக்கப்படும் தாம்பரம் - போடிநாயக்கனூா், தாம்பரம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தாம்பரம் - போடிநாயக்கனூா் வாராந்திர சிறப்பு ரயில் (06059) சனிக்கிழமையிலும், மறுமாா்க்கத்தில் போடிநாயக்கனூா் - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் (06060) ஞாயிற்றுக்கிழமையிலும் இயக்கப்படுகிறது.

இதில், தாம்பரம் - போடிநாயக்கனூா் சிறப்பு ரயில் செப். 26 வரையிலும், போடிநாயக்கனூா் - தாம்பரம் சிறப்பு ரயில் செப். 27 வரையிலும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

தற்போது இந்த ரயில் இருமாா்க்கத்திலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தாம்பரம் - போடிநாயக்கனூா் வாராந்திர சிறப்பு ரயில் 2026 அக். 24 வரையிலும், போடிநாயக்கனூா் - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் 2026 அக். 25 வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, திருநெல்வேலி - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் ( 06070) செப்ய 24 வரையிலும், தாம்பரம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (06069) செப். 25 வரையிலும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த ரயில் சேவை இரண்டு மாா்க்கங்களிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் 2026 அக். 29 வரையிலும், தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் அக். 30 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments