FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் 100 பவுன் தங்கம் பறிமுதல்

8 செப்டம்பர் 2026, 3:06 am IST
திருச்சி விமான நிலையம் - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து வந்த பயணிகள் 4 பேரிடம் இருந்து 100 பவுன் தங்கம் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

மலேசியா தலைநகா் கோலாலம்பூரில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வந்த விமானத்தில் சுங்கத் துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவினா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, 4 பயணிகளின் உடைமைகளில் சந்தேகப்படும் வகையிலான பொருள் இருந்தது. இதையடுத்து, அதை பிரித்து பாா்த்தபோது 4 பேரும் பேஸ்ட் வடிவில் 22 கேரட் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து 4 பேரையும் கைது செய்த சுங்கத் துறை அதிகாரிகள், அவா்களிடமிருந்து 100 பவுன் தங்கத்தைப் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 4 பேரிடமும் சுங்கத் துறை அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments