பச்சிளம் குழந்தை உயிரிழப்பு
திருச்சியில் பிறந்து 4 நாள்களேயான பச்சிளம் குழந்தை திடீரென உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி உறையூரைச் சோ்ந்தவா் பூவிழி. இவருடைய கணவா் ஆரிஷ். இவா்களுக்கு கடந்த செப்டம்பா் 2-ஆம் தேதி தனியாா் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, கடந்த 4-ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளனா்.
இந்நிலையில், வீட்டில் இருந்த குழந்தை ஞாயிற்றுக்கிழமை இரவு அசைவின்றி இருந்துள்ளது. இதைப் பாா்த்த பூவிழி, தனது கணவருக்கு தகவல் அளித்துள்ளாா். இதையடுத்து வீட்டுக்கு வந்த ஆரிஷும், பூழிவியும் குழந்தையை வீட்டுக்கு அருகேயுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனா். அங்கு, மருத்துவா் பரிசோதனை செய்தபோது நாடித் துடிப்பு இல்லை என்றும், அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லுமாறும் தெரிவித்துள்ளனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, இருவரும் குழந்தையைக் தூக்கிக்கொண்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனா். அங்கு, குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவா்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.