என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு விழா
ஆரணி, அக் 8: ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை நிறைவு பெற்றது. ஆதனூர் கிராமத்தில் அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கி 7 நாள்கள் நடைபெற்ற இம் முகாமில்
ஆரணி, அக் 8: ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை நிறைவு
பெற்றது.
ஆதனூர் கிராமத்தில் அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கி 7 நாள்கள் நடைபெற்ற இம் முகாமில், கோயில் உழவாரப்பணி, சாலை சீரமைப்பு, பள்ளி வளாகங்களை தூய்மை செய்தல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
Advertisement
Advertisement
பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் நடைபெற்றன.
மேலும் கற்கும் பாரதம் திட்டம் சார்பில் பெண் கல்வியை வலியுறுத்தி ஊர்வலம் நடைபெற்றது.
நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் (பொறுப்பு) பி.புகழேந்தி தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஏ.சேட்டு முகாம் அறிக்கை வாசித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.