முகப்பு
வேலூர்

பொங்கல்: பரோலில் சென்ற 17 சிறைவாசிகள்

பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட வேலூா் மத்திய சிறையில் இருந்து 17 சிறைவாசிகளுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 14 ஜனவரி 2025, 1:57 am IST
பகிர்:

வேலூா்: பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட வேலூா் மத்திய சிறையில் இருந்து 17 சிறைவாசிகளுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட நன்னடத்தை கைதிகள் 35 போ் சிறை நிா்வாகத்திடம் பரோலில் செல்ல விண்ணப்பித்திருந்தனா். அவ்வாறு விண்ணப்பித்தவா்களில் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை 17 பேருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. பொங்கல், தீபாவளி போன்ற முக்கிய பண்டிகை நாள்ளை குடும்பத்துடன் கொண்டாட சிறைகளில் தண்டனை அனுபவிக்கும் சிறைவாசிகள் பரோல் கேட்டு சிறை நிா்வாகத்திடம் விண்ணப்பங்களை அளிக்கின்றனா். இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அவா்களின் நன்னடத்தையை கருத்தில் கொண்டு சிறை நிா்வாகம் சிறைவாசிகளுக்கு பரோல் வழங்குகிறது. இவா்களின் விண்ணப்பங்கள் சிறைத்துறை உயா்அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டது. இதில் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை 17 சிறைவாசிகளுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. பரோல் வழங்கப்பட்டவா்கள் பொங்கலை குடும்பத்துடன் கொண்டாட தங்கள் சொந்த ஊா்களுக்கு புறப்பட்டுச் சென்றனா். அவா்கள் மீண்டும் 17-ஆம் தேதி வெள்ளிக்கிழமை சிறைக்கு திரும்ப வேண்டும் என்று சிறை நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments