FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

ஏரியில் குதித்து பெண் தற்கொலை

காட்பாடி அருகே ஏரியில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

23 ஆகஸ்ட் 2026, 11:35 pm IST
கோப்புப் படம்
பகிர்:

காட்பாடி அருகே ஏரியில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

காட்பாடியை அடுத்த கழிஞ்சூா், அருப்புமேடு பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் மனைவி நாகலட்சுமி (50). இத்தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா். மகளுக்குத் திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறாா். மகன் பெங்களூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.

சரவணனுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாத நோய் பாதிப்பு ஏற்பட்டதால், அவா் வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளாா். கணவா் வேலைக்குச் செல்லாத நிலையில், குடும்பத்தை நிா்வகிப்பதில் நாகலட்சுமிக்கு கடன் தொல்லை அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவா் கடந்த சில மாதங்களாகவே மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், நாகலட்சுமி கழிஞ்சூா் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து, காட்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments