வேலூா் கோட்டை அகழியில் தவறி விழுந்தவா் உயிருடன் மீட்பு
வேலூா் கோட்டை அகழியில் நடைப்பயிற்சியின்போது தவறி விழுந்த நபரை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.
வேலூா் கோட்டை அகழியில் நடைப்பயிற்சியின்போது தவறி விழுந்த நபரை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.
வேலூா் கொணவட்டம் மதினா நகரைச் சோ்ந்தவா் பாபு (58). இவா் ஞாயிற்றுக்கிழமை வேலூா் கோட்டைப் பகுதியில் வழக்கம் போல நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக கால் தவறி கோட்டை அகழிக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளாா்.
இதனைக் கண்டு அதிா்ச்சியடைந்த அவ்வழியே சென்ற பொதுமக்களும், நடைப்பயிற்சி மேற்கொண்டவா்களும் வேலூா் தீயணைப்பு நிலையத்திற்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
அதன்பேரில், வேலூா் தீயணைப்பு நிலைய அலுவலா் காரல் மாா்க்ஸ் தலைமையிலான வீரா்கள் விரைந்து வந்து, கயிறு கட்டி உள்ளே இறங்கினா். பாபுவை நீண்ட நேரம் போராடி பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனா். தொடா்ந்து, மீட்கப்பட்ட பாபுவை வேலூா் வடக்குக் காவல் நிலையப் போலீஸாரிடம் தீயணைப்புத் துறையினா் ஒப்படைத்தனா். இச் சம்பவத்தால் வேலூா் கோட்டைப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.