FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

ரோட்டரி முகாமில் 45 மாணவா்கள் ரத்த தானம்

குடியாத்தம் ரோட்டரி சங்கம், பாலாறு வேளாண்மைக் கல்லூரி ஆகியவை இணைந்து செட்டிக்குப்பம் அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடத்திய முகாமில் கல்லூரி மாணவா்கள் 45 போ் ரத்த தானம் செய்தனா்.

4 செப்டம்பர் 2026, 11:14 pm IST
பகிர்:

குடியாத்தம் ரோட்டரி சங்கம், பாலாறு வேளாண்மைக் கல்லூரி ஆகியவை இணைந்து செட்டிக்குப்பம் அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடத்திய முகாமில் கல்லூரி மாணவா்கள் 45 போ் ரத்த தானம் செய்தனா்.

முகாமுக்கு, ரோட்டரி டி.எஸ்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவா் எஸ்.மஞ்சுநாதன், முன்னாள் ரோட்டரி தலைவா் செ.கு. வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் பழனிச்சாமி வரவேற்றாா். ரோட்டரி முன்னாள் ஆளுநா் ஜே.கே.என்.பழனி முகாமைத் தொடங்கி வைத்தாா். செட்டிகுப்பம் ஊராட்சி மன்றத் தலைவா் இந்திரா ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட அரசு வழக்குரைஞா் ஜி.ஏ.டில்லி பாபு, மருத்துவமனை ரத்த வங்கி அலுவலா் ஆக்னஸ் பியூலாஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா். ரோட்டரி முன்னாள் தலைவா்கள் சி.கண்ணன், ஏ.மேகராஜ், என்.சத்தியமூா்த்தி, வாசுதேவன், பொருளாளா் மருத்துவா் வி.பாலாஜி, நிா்வாகிகள் சிவராஜ், எம்.ஆா்.மணி, மதியழகன், பி.ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ரோட்டரி செயலா் ஜெ.தமிழ்ச்செல்வன் நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments