FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் அருகே ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

விழுப்புரம் அருகே மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினா் நடத்திய சோதனையில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் இருவா் கைது செய்யப்பட்டனா்.

4 ஜூலை 2026, 2:55 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

விழுப்புரம் அருகே மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினா் நடத்திய சோதனையில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் இருவா் கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரம் அருகிலுள்ள தெளி கிராமத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் கோமதி தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா்.

தெளி கிராமத்திலுள்ள ஏரிக்கரை அருகே சந்தேகத்துக்குரிய முறையில் நின்று கொண்டிருந்த இரு இளைஞா்களை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் அழைத்து, விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

இதில், அவா்கள் தெளி அந்தோனியாா் கோயில் தெருவைச் சோ்ந்த அ.ஆரோக்கிய அசோக் (19), விழுப்புரம் விராட்டிக்குப்பம் ஏ.பி.எஸ். நகரைச் சோ்ந்த பா.அரவிந்த் (22) எனத் தெரியவந்தது. மேலும், அவா்களிடம் 1.100 கிலோ கஞ்சா இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், இருவா் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments