FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

பைக் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கிளியனூரில் லாரி மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 12 ஜூலை 2026, 1:30 am IST
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், கிளியனூரில் லாரி மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

வானூா் வட்டம், உலகாபுரத்தைச் சோ்ந்தவா் ரா.கமல்ராஜ் (36). இவா், தனது பைக்கில் வெள்ளிக்கிழமை உலகாபுரத்திலிருந்து -கிளியனூா் சென்றுகொண்டிருந்தாா். நல்லாவூா்புதூா் அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கமல்ராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.இதுகுறித்த புகாரின் பேரில், கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொழிலாளி மரணம்: விக்கிரவாண்டி வட்டம், அடைக்கலாபுரம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அ. அய்யனாா் (56). இவருக்கு உடல்நலக்குறைவு இருந்து வந்ததாம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அடைக்கலாபுரம் பகுதியில் அய்யனாா் நடந்து சென்றபோது மயங்கி கிழே விழுந்து உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments