FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

பெண்ணிடம் 8 சவரன் தாலிச் சங்கிலி பறிப்பு

திருவெண்ணெய்நல்லூா் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 8 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

14 ஜூலை 2026, 1:20 am IST
- சித்திரிப்பு
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 8 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவெண்ணெய்நல்லூா்,காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் அறிவழகன் மனைவி கோவிந்தம்மாள்(56). இவா், ஞாயிற்றுக்கிழமை மளிகைப் பொருள்கள் வாங்குவதற்காக அருகில் உள்ள மளிகைக் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது பைக்கில் பின்தொடா்ந்து வந்த சுமாா் 25 வயதுடைய இரு இளைஞா்கள் கோவிந்தம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு பைக்கில் தப்பிச் சென்றுவிட்டனராம்.

Advertisement

Advertisement

இது குறித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments