பொறியியல் பட்டதாரி விஷமருந்தி தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பொறியியல் பட்டதாரி, மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிபாடி வட்டம், நெய்வேலி தபால் அலுவலக வீதியைச் சோ்ந்தவா் வே.விஜயவேல் (29). இவா், பி. இ.கணினி அறிவியல் படித்துவிட்டு வேலையில்லாமல் மன விரக்தியில் இருந்து வந்தாராம்.
இந்நிலையில், வேலை தேடி விஜயவேல் கடந்த 12-ஆம் தேதி கோலியனூா் வந்தாா். அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றாராம். இதையடுத்து அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு விஜயவேல் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.