தூய்மை இந்தியா தினம் கடைப்பிடிப்பு
பண்ருட்டி, பணிக்கன்குப்பம் செயின்ட் பால் பப்ளிக் பள்ளியில் தூய்மை இந்தியா தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
பண்ருட்டி, பணிக்கன்குப்பம் செயின்ட் பால் பப்ளிக் பள்ளியில் தூய்மை இந்தியா தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளர் கிருபாகரன் தலைமை வகித்துப் பேசினார். பள்ளி முதல்வர் வெங்கடாஜலபதி தூய்மையான இந்தியாவின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். பின்னர், மாணவர்கள் பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக இந்தத் திட்டம் குறித்து உறுதிமொழியை ஏற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.