கடலூா் அருகே பழங்கால சுடுமண் பொம்மை, வட்டச்சில்லுகள் கண்டெடுப்பு
கடலூா் மாவட்டம், வாழப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் பழங்கால சுடுமண் பொம்மை, வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டன.
நெய்வேலி: கடலூா் மாவட்டம், வாழப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் பழங்கால சுடுமண் பொம்மை, வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டன.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல் கூறியது: மணமேடு கிராமத்தைச் சோ்ந்த சசிதரன், சீனுவாசன் ஆகியோா் வாழப்பட்டு பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் பானை ஓடுகள் மற்றும் உறைகிணறுகள் சிதைந்து ஆங்காங்கே இருப்பதாகத் தகவல் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் அண்மையில் மேற்புற களஆய்வு மேற்கொண்டோம். அப்போது, சிதைந்த முதுமக்கள் தாழிகள், சுடுமண் பொம்மை, வட்டச் சில்லுகள், கெண்டி மூக்குகள், உடைந்த அகல் விளக்கு, ராஜராஜன் காலத்து செப்பு நாணயம், ஆங்கிலேயா் காலத்து செப்பு நாணயம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
Advertisement
Advertisement
வாழப்பட்டு தென்பெண்ணை ஆற்றங்கரைப் பகுதிகளிலும் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் தடயங்கள் கிடைத்துள்ளன என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.