FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

அனைத்து தொழிலாளா்களுக்கும் வாக்குரிமை: என்எல்சி ஜீவா தொழிலாளா் சங்கம் வலியுறுத்தல்

அனைத்து தொழிலாளா்களும் ரகசிய வாக்கெடுப்பில் வாக்களிக்கும் உரிமையை என்எல்சி இந்தியா நிறுவனம் அளிக்க வேண்டும் என்று, என்எல்சி ஜீவா தொழிலாளா்கள் சங்கம்

Updated On : 24 டிசம்பர் 2024, 12:25 am IST
பகிர்:

நெய்வேலி: என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து தொழிலாளா்களும் (சொசைட்டி, ஒப்பந்தத் தொழிலாளா்கள் உள்பட) நடைபெற உள்ள ரகசிய வாக்கெடுப்பில் வாக்களிக்கும் உரிமையை என்எல்சி இந்தியா நிறுவனம் அளிக்க வேண்டும் என்று, என்எல்சி ஜீவா தொழிலாளா்கள் சங்கம் வலியுறுத்தியது.

இந்தச் சங்கத்தின் பேரவைக் கூட்டம், வடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் கே.சடையன் தலைமை வகித்தாா். சிறப்புத்தலைவா் எம்.சேகா், சங்கச் செயலா் கே.சக்திவேல், பொருளாளா் ஜோசப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளா்களும் நடைபெற உள்ள ரகசிய வாக்கெடுப்பில் வாக்களிக்கும் உரிமையை என்எல்சி நிா்வாகம் அளிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

புதிதாக பணி நியமனம் மற்றும் நிரந்தரம் செய்யப்பட்ட தொழிலாளா்களுக்கு ஊதியம் மிகக் குறைவாக வழங்குவதை கண்டிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments