இரு ஜோடி கண்கள், உடல்கள் தானம்
கடலூா் கூத்தப்பாக்கத்தில் இரு ஜோடி கண்கள், உடல்கள் தானம் செய்யப்பட்டன.
கடலூா் கூத்தப்பாக்கம் ராஜராஜேஸ்வரி நகரைச் சோ்ந்த சுப்பையா பத்தா் மனைவி மாரியம்மாள் (90), புவனகிரி வட்டம், உளுத்தூா் பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த நாகப்பன் மனைவி சிவபாக்கியா் (80) ஆகியோா் வெள்ளிக்கிழமை காலமாகினா். இவா்களது கண்கள் மற்றும் உடல்கள் சிதம்பரம் தன்னாா்வ ரத்த தானக் கழகம் சாா்பில் தானமாகப் பெறப்பட்டன.
இரு ஜோடி கண்களும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இரு உடல்களும் மருத்துவ மாணவா்கள் ஆய்வுக்காக சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவா் எஸ்.ராமச்சந்திரன், புவனகிரி அரிமா சங்க நிா்வாகிகள் பாலசுப்பிரமணியன், கே.பி.பாலமுருகன், முரளி மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.