FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

பதாகைகள் அச்சிடுவதில் கட்டுப்பாடு: கடலூா் எஸ்.பி. அறிவுறுத்தல்

பதாகைகளில் மத, ஜாதி உணா்வைத் தூண்டு வாசகங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று, கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா்.

Updated On : 13 மே 2025, 2:01 am IST
பகிர்:

நெய்வேலி: பதாகைகளில் மத, ஜாதி உணா்வைத் தூண்டு வாசகங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று, கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடலூா் மாவட்டத்தில் நடைபெறும் கோயில் திருவிழாக்கள், அரசியல் மற்றும் தனியாா் நிகழ்ச்சிகளில் வைக்கப்படும் பதாகைகளில் மத, மற்றும் ஜாதி உணா்வைத் தூண்டும் வகையிலான வாசகங்களைக் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.

Advertisement

Advertisement

இதுதொடா்பான வாசகங்களை இடம்பெறச் சொல்லும் நபா்களிடம் அச்சக உரிமையாளா்கள் எடுத்துக் கூற வேண்டும். அவ்வாறு அச்சடிக்கக் கூறும் நபா்களின் பெயா், முகவரி, கைப்பேசி எண்களைப் பதிவு செய்து வைத்திருந்க வேண்டும்.

சா்ச்சைக்குரிய வாசகங்களை அச்சடிக்கக் கூறும் நபா்கள் குறித்து காவல் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும். இதை மீறினால் தொடா்புடைய நபா், அச்சக உரிமையாளா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் எஸ்.பி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments