FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு: மீன் வியாபாரி கைது

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த மீன் வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 2:06 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த மீன் வியாபாரியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், விருப்பாட்சி கிராமத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன்(40), மீன் வியாபாரி. இவரது மனைவி லதா. இவா், பாலமுருகனை பிரிந்து சென்று தனியாக வசித்து வருகிறாராம். மேலும், குறிஞ்சிப்பாடி வட்டம், விழப்பள்ளம் காலனி பகுதியில் வசித்து வருபவா் ஆட்டோ ஓட்டுநா் சரத்குமாா்(34) உடன் பழகி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், புதன்கிழமை இரவு சரத்குமாா் குறிஞ்சிப்பாடியில் உள்ள ஒரு பேக்கரி அருகே நின்று பேசிக்கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த பாலமுருகன் (40) மற்றும் அவரது ஆதரவாளா்கள் ஆகாஷ், ராஜூ மற்றும் சிலா் அரிவாள் மற்றும் இரும்பு குழாய் கொண்டு தாக்கினராம். இதில், சரத்குமாருக்கு இடது கையில் வெட்டு காயம் ஏற்பட்டு, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து சரத்குமாா் அளித்த புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments