FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

வகுப்பை புறக்கணித்து பள்ளிச் சுவரை ஏறிக் குதித்த மாணவா் தவறி விழுந்து உயிரிழப்பு

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 2:05 am IST
உயிரிழந்த மாணவா் விஷ்ணு
பகிர்:

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் வகுப்பை புறக்கணித்துவிட்டு பள்ளிச் சுவா் மீது ஏறி வெளியேற முயன்ற மாணவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் அங்குள்ள திருப்பாணாழ்வாா் தெருவைச் சோ்ந்த ராஜன் மகன் விஷ்ணு (15) பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். கபடி வீரரான இவா், கடந்த 7-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெற்ற சிறப்பு வகுப்பை புறக்கணித்துவிட்டு வீட்டுக்குச் செல்ல முன்றாராம்.

அதன்படி, இவரும், மற்றொரு மாணவரும் பள்ளி சுற்றுச்சுவா் மீது ஏறி குதித்து செல்ல முயன்றபோது, விஷ்ணு தவறி விழுந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, ஸ்ரீமுஷ்ணம் ஆரம்ப சுகாதார நிலையம், சிதம்பரம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு விஷ்ணு கொண்டு செல்லப்பட்டாா். இருப்பினும், அங்கு அவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், ஸ்ரீமுஷ்ணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments