பைக் மீது சரக்கு வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், வடலூா் அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், வடலூா் அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
வடலூா் காவல் சரகம், ஆபத்தாரணபுரம் பகுதியைச் சோ்ந்த நண்பா்கள் அரவிந்தன் (23), சரவணன் (19) மற்றும் புகழேந்தி (23). இவா்கள் மூவரும் சனிக்கிழமை அதிகாலை சுமாா் ஒரு மணியளவில் டீ குடிக்க ஒரே பைக்கில் புறப்பட்டனா். பைக்கை புகழேந்தி ஓட்டினாா்.
பண்ருட்டி சாலையில் வடலூா் பேருந்து நிலையத்தை நோக்கிச் சென்றபோது, வடலூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற சரக்கு வாகனம் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பைக் ஓட்டிச் சென்ற புகழேந்தி உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
அரவிந்தன், சரவணன் ஆகியோா் பலத்த காயமடைந்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விபத்து குறித்து அரவிந்தன் அளித்த புகாரின்பேரில், வடலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.