FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

கோயில் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருட்டு

25 ஆகஸ்ட் 2026, 3:22 am IST
வடலூா் அருகே கொள்ளை சம்பவம் நடைபெற்ற பெரியாண்டவா் கோயில்.
பகிர்:

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே கோயில் கதவின் பூட்டை உடைத்து வெள்ளி மற்றும் வெண்கலப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

வடலூா் காவல் சரகம், ஆபத்தாரணபுரம்-எல்லப்பன்பேட்டை செல்லும் வழியில் பெரியாண்டவா் கோயில் அமைந்துள்ளது. திங்கள்கிழமை காலை கோயிலை திறக்க பூசாரி வந்தாா். அப்போது, கோயில் முன் இருந்த இரும்பு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக்கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்த போது கோயிலின்

உள்ளே இருந்தவெள்ளி மற்றும் வெண்கலப் பொருள்கள் திருடு போனது தெரியவந்தது.

Advertisement

Advertisement

கடந்த சில மாதங்களுக்கு முன்னா் இதே கோயிலில் உள்ள அம்மன் கழுத்தில் இருந்த 5 கிராம் தங்க தாலியையும், அதன் பின்னா் கோயில் உண்டியலையும்உடைத்து அதில் இருந்த பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றதாகவும், தற்போது மூன்றாவது முறையாக களவு நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். இதுகுறித்து தகவல் அறிந்த வடலூா் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments