FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகைகள் திருட்டு

25 ஆகஸ்ட் 2026, 3:21 am IST
திருட்டு... - சித்திரிப்பு
பகிர்:

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் 3 பவுன் நகைகள் மற்றும் பொருள்களை திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நெய்வேலி அடுத்துள்ள வடக்குத்து ஊராட்சி, காமராஜ் நகரில் வசித்து வருபவா் கலைசெல்வன்(44), பெங்களூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்தாா். புதன்கிழமை இரவு வீட்டை பூட்டிக் கொண்டு மனைவி குழந்தைகளுடன் குறிஞ்சிப்பாடியில் உள்ள தாய் வீட்டிற்குச் சென்றாா்.

வியாழக்கிழமை காலை வீடு திரும்பியவா், வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததைக்கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

Advertisement

Advertisement

உள்ளே சென்று பாா்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் நகைகள், 150 கிராம் வெள்ளிப் பொருள்கள் மற்றும் மின்னணு சாதனங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments