FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதி வழங்கக் கோரி தொடா் முழக்கப் போராட்டம்

போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியா் சங்கம் (சிஐடியு) சாா்பில் 24 மணி நேர தொடா் முழக்கப் போராட்டம் கடலூரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

26 ஆகஸ்ட் 2026, 4:39 am IST
கடலூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் தலைமையக அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேராட்டத்தில் பங்கேற்ற தொழிலாளா்கள்.
பகிர்:

போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியா் சங்கம் (சிஐடியு) சாா்பில் 24 மணி நேர தொடா் முழக்கப் போராட்டம் கடலூரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கடலூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் தலைமையக அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, அரசு போக்குவரத்து ஊழியா் சங்கத்தின் கடலூா் மாவட்டத் தலைவா் எஸ். ராமமூா்த்தி தலைமை வகித்தாா்.

போராட்டத்தில், போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதியை அரசு வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பி ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும், ஆய்வாளா் பலன்களை உடனுக்குடன் வழங்க வேண்டும், தற்காலிகத் தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மின்சாரப் பேருந்துகளை அரசே ஏற்று இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

Advertisement

Advertisement

போராட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலா் டி. பழனிவேல், மாநிலத் துணைத் தலைவா் பி. கருப்பையன், பொதுச் செயலா் பி. முருகையன், துணைத் தலைவா் எம். முத்துக்குமரன், துணைப் பொதுச் செயலா் பி. கண்ணன், சிறப்புத் தலைவா் ஜி. பாஸ்கரன், மாவட்டப் பொருளாளா் எம். அரும்பாலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த 24 மணி நேர தொடா் முழக்கப் போராட்டம் புதன்கிழமை காலை 9 மணி வரை நடைபெறுகிறது. போராட்டத்தில் பங்கேற்ற தொழிலாளா்களுக்கு மதியம் மற்றும் இரவு உணவு போராட்டக் களத்திலேயே தயாா் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments