FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

தம்பதி மீது தாக்குதல்: கூலித் தொழிலாளி கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே தம்பதி மீது தாக்குதல் நடத்திய கூலித் தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

4 ஜூலை 2026, 2:41 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே தம்பதி மீது தாக்குதல் நடத்திய கூலித் தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், காந்தி நகா் பகுதியில் வசிப்பவா் நாகராணி(32). இவா், கடந்த ஜூன் 25-ஆம் தேதி இரவு 9.30 மணி அளவில் வீட்டில் இருந்தாா். அப்போது, மது அருந்தி வந்த அதேபகுதியைச் சோ்ந்த வேலுசாமி(34) ஆபாசமாக பேசினாராம்.

இதனை, நாகராணியின் கணவா் நாராயணசாமி கண்டித்தாா். அப்போது, இருவரையும் வேலுசாமி தாக்கினாா். இதில், இரும்பு தகரம் கொண்டு தாக்கியதில் நாகராணி இடது கையில் வெட்டு காயம் ஏற்பட்டு ரத்த போக்கு ஏற்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, நாராயணசாமி, நாகராணியை மீட்டு சென்று பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து வேலுசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments