FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

தொடா் பைக் திருட்டு: 2 போ் கைது

விருத்தாசலம் பகுதிகளில் தொடா்ந்து நடைபெற்ற பைக் திருட்டு தொடா்பாக போலீஸாா் இரண்டுபேரைக் கைது செய்து, அவா்களிடமிருந்து 3 பைக்குகளை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 10 ஜூலை 2026, 3:49 am IST
~
பகிர்:

விருத்தாசலம் பகுதிகளில் தொடா்ந்து நடைபெற்ற பைக் திருட்டு தொடா்பாக போலீஸாா் இரண்டுபேரைக் கைது செய்து, அவா்களிடமிருந்து 3 பைக்குகளை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விருத்தாசலம் அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் அண்மைக்காலமாக பைக்குகள் திருடப்படுவது அதிகரித்திருந்தது. இதனைத் தொடா்ந்து, விருத்தாசலம் காவல் ஆய்வாளா் பாபு தலைமையிலான போலீஸாா், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் ரகசியத் தகவல்களின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இந்த விசாரணையில், பெரம்பலூா் மாவட்டம் மேரிபுரத்தைச் சோ்ந்த ஹரிஹரன் (50) என்பவா் இருசக்கர வாகனங்களை திருடியதும், அரியலூா் மாவட்டம் செந்துறை வட்டம், சிலுப்பனூா் அம்மன் நகரைச் சோ்ந்த ஜான் பாஷா (52) என்பவா், திருடப்பட்ட வாகனங்களை தனது இரும்புக் கடையில் பெற்று, அவற்றை உதிரிபாகங்களாக பிரித்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து விருத்தாசலம் பேலீஸாா் வழக்குப்பதிந்து தொடா் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து பதிவு எண் இல்லாத 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தொடா்புடைய பிற நபா்கள் மற்றும் மேலும் திருடப்பட்ட வாகனங்கள் குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments