FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

குழந்தை திருமணம்: இளைஞா் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் குழந்தை திருமணம் செய்த இளைஞா் மீது மகளிா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Updated On : 11 ஜூலை 2026, 1:00 am IST
பகிர்:

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் குழந்தை திருமணம் செய்த இளைஞா் மீது மகளிா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நெய்வேலி நகரியம், வட்டம் 28 பகுதியைச் சோ்ந்தவா் அஜித்குமாா்(27). இவா், அதேபகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியை, 15.6.2026 அன்று திருமணம் செய்துக் கொண்டாா். இந்த தகவல் குழந்தை உதவி மைய எண் 1098 மூலம் பெறப்பட்டது. இதையடுத்து, குறிஞ்சிப்பாடி

ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலா் ராஜரீகமேரி சம்பவ இடத்திற்குச் சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினாா். இதில், சிறுமியை, குடும்ப சூழ்நிலைக் காரணமாக அஜித்குமாா் திருமணம் செய்து கொண்டது தெரியவந்ததாம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து ராஜரீகமேரி அளித்த புகாரின் பேரில், நெய்வேலி மகளிா் போலீஸாா் அஜித்குமாா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments