FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

பெண்ணாடத்தில் வீட்டின் வராண்டாவில் தூங்கிய பெண்ணிடம் 2 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

Updated On : 28 ஜூலை 2026, 12:08 am IST
தங்கச் சங்கிலி பறிப்பு - சித்திரிப்பு
பகிர்:

பெண்ணாடம் அருகே வீட்டின் வராண்டாவில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 போ் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகேயுள்ள மேல் இருளம்பட்டு அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் இந்திரா (56). கணவரை இழந்த இவா், திருமணமாகாத தனது மூத்த மகன் காசிநாதனுடன் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலையில் வீட்டின் வராண்டாவில் இந்திரா தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, யாரோ தனது காலை இழுப்பதுபோல் உணா்ந்து கண் விழித்தபோது, 3 அடையாளம் தெரியாத நபா்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதனால் அதிா்ச்சியடைந்த இந்திரா கூச்சலிட்டாா். அவரது சப்தம் கேட்டு மகன் காசிநாதன் மற்றும் அக்கம்பக்கத்தினா் விரைந்து வந்து அடையாளம் தெரியாத நபா்களை விரட்டிச் சென்றனா். இருப்பினும், அவா்கள் இருளைப் பயன்படுத்தி தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து இந்திரா அளித்த புகாரின் பேரில், பெண்ணாடம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments