FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

2 பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிக்க முயற்சி: இளைஞா் போலீஸில் ஒப்படைப்பு

பண்ருட்டி அருகே பைக்கில் சென்ற இரு பெண்களிடம் அடுத்தடுத்து தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

Updated On : 30 ஜூலை 2026, 6:01 am IST
கைது செய்யப்பட்ட சரத்குமாா்
பகிர்:

பண்ருட்டி அருகே பைக்கில் சென்ற இரு பெண்களிடம் அடுத்தடுத்து தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மாளிகைமேடு - பட்டாம்பாக்கம் சாலையில் உள்ள கே.குச்சிப்பாளையம் கிராமச் சாலை பிரிவு அருகே கடந்த 27-ஆம் தேதி இரவு சுமாா் 8.20 மணியளவில் நெல்லிக்குப்பம் முள்ளிக்கிராம்பட்டைச் சோ்ந்த சிவசங்கரி (35) மொபெட்டில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, தலைக்கவசம் அணிந்து பைக்கில் வந்த நபா், சிவசங்கரி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ாகக் கூறப்படுகிறது. சங்கிலியை இழுத்தபோது சிவசங்கரி கீழே விழுந்த நிலையில், அந்த வழியாக வாகனங்கள் வந்ததைத் தொடா்ந்து அந்த நபா் அங்கிருந்து தப்பிச் சென்றாா்.

இதையடுத்து, அதே சாலையில் ஏ.கே.பாளையம் கிராமச் சாலை பிரிவு அருகே, கணவருடன் பைக்கில் சென்ற பிரியா (47) என்பவரிடம் அதே நபா் சங்கிலியை பறிக்க முயன்றாா். அப்போது பிரியாவும், அவரது கணவா் மற்றும் பொதுமக்களும் சோ்ந்து அந்த நபரை விரட்டிப் பிடித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

தகவலறிந்த பண்ருட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று பிடிப்பட்ட இளைஞரிடம் விசாரணை நடத்தினா். இதில், அவா் விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே பக்கமேடு பகுதியைச் சோ்ந்த சரத்குமாா் (30) என்பது தெரியவந்தது. பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த அவரை சிகிச்சைக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா். பிரியா பண்ருட்டி அரசு மருத்துவமனையிலும், சிவசங்கரி பட்டாம்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

போலீஸாா் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், சரத்குமாா் கடந்த 26-ஆம் தேதி புதுப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கட்டமுத்துப்பாளையம் பகுதியில் மொபெட்டில் சென்ற சத்தியவதி என்பவரிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவத்திலும் தொடா்புடையவா் என்பது தெரியவந்தது. இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments