முகப்பு
கடலூர்

புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

கடலூா் மாவட்டம், வடலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சாா்பில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 ஜூன் 2026, 5:29 am IST
வடலூரில் திங்கள்கிழமைநடைபெற்ற புகையிலைஎதிா்ப்புதின விழிப்புணா்வு பேரணி.
பகிர்:

கடலூா் மாவட்டம், வடலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சாா்பில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

வடலூா் வட்டார மருத்துவ அலுவலா் பாலச்சந்தா் தலைமை வகித்தாா். பேரணியில் பங்கேற்ற செவிலிய மாணவிகள் விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தியவாறு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, உறுதிமொழி ஏற்றனா்.

மருத்துவ அலுவலா்கள் பவுலின், ஆரோக்கிய மேரி, கவியரசி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ரமேஷ், மருத்துவமில்லா மேற்பாா்வையாளா் பெருமாள், சுகாதார ஆய்வாளா்கள் லட்சுமண நாராயணன், தேவானந்த், திருமாலன், ஆற்றுப்படுத்துனா்

Advertisement

Advertisement

டெய்சி ராணி, மருத்துவப் பணியாளா்கள், செவிலிய மாணவிகள், களப் பணியாளா்கள், பொதுமக்கள் உட்பட பலா் கலந்துகொண்டனா்.