FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

கடன் தொகை கேட்டு கொலை மிரட்டல்: 2 போ் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், வடலூரில் கடன் தொகையை கேட்டு கொலை மிரட்டல் விடுத்த இருவா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Updated On : 10 ஜூன் 2026, 5:21 am IST
வழக்கு
பகிர்:

கடலூா் மாவட்டம், வடலூரில் கடன் தொகையை கேட்டு கொலை மிரட்டல் விடுத்த இருவா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், பிள்ளைபாளையம் கிராமத்தில் வசித்து வருபவா் ஆரோக்கியசாமி(46). இவா், கடந்த 5 ஆண்டு களுக்கு முன்னா், ஆயிப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த தனஜெயம் என்பவரிடம் ரூ.75 ஆயிரம் கடன் பெற்றாராம்.

கடந்த 5-ஆம்தேதி ஆரோக்கியசாமி வீட்டிற்கு வந்த தனஜெயம் மற்றும் ராஜதுரைஆகியோா், கடன் தொகையை கேட்டு அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். மேலும், ஆரோக்கியசாமியின் மூத்த மகனை வீட்டினுள் வைத்து பூட்டி விட்டனராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து, ஆரோக்கியசாமியின் மகன் டேவிஸ்ராஜ் அளித்த புகாரின் பேரில், வடலூா் போலீஸாா் தனஜெயம், ராஜதுரை ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments