முகப்பு
கடலூர்

ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு எதிா்ப்பு: கிள்ளை பேரூராட்சியில் தீா்மானம்

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே கடலில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து கிள்ளை பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On : 18 ஜூன் 2026, 3:24 am IST
சிதம்பரம் அருகே கிள்ளையில் நடைபெற்ற பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மு.தமிமுன்அன்சாரி எம்எல்ஏ உள்ளிட்டோா்.
பகிர்:

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே கடலில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து கிள்ளை பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிள்ளை பேரூராட்சி மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் மல்லிகா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கிள்ளை ரவீந்திரன், செயல் அலுவலா் மலா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சிதம்பரம் எம்எல்ஏ மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று உரையாற்றினாா். கூட்டத்தில் கிள்ளை பேரூராட்சிக்குள்பட்ட முழுக்குத்துறை, முடசல்ஓடை, எம்ஜிஆா் திட்டு ஆகிய பகுதிகளை இணைத்து கிழக்கு கடற்கரையோரம் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தியும், திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்தும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement

Advertisement