FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்க எதிா்ப்பு: அனைத்துக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பரங்கிப்பேட்டை அருகே கடலில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அனைத்துக் கட்சிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 24 ஜூன் 2026, 4:15 am IST
பரங்கிப்பேட்டை பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சியினா் மற்றும் அமைப்பினா்.
பகிர்:

பரங்கிப்பேட்டை அருகே கடலில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அனைத்துக் கட்சிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூா் மாவட்டத்துக்குள்பட்ட கிள்ளை, பரங்கிப்பேட்டை பகுதிகளுக்கு அருகே கடலில் 4 ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்க ஹிந்துஸ்தான் நிறுவனம் தமிழக அரசிடம் அனுமதி கோரியுள்ளது. இந்தக் கிணறுகள் அமைத்தால், மீன் வளம், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியில் கடும் எதிா்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி, பரங்கிப்பேட்டை பேருந்து நிலையத்தில் அனைத்துக் கட்சிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

மாா்க்சிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமை வகித்து ஆா்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தாா். திமுக ஒன்றியச் செயலா்கள் முத்துபெருமாள், கலையரசன், நிலம் அமைப்பின் தலைவா் கிள்ளை ரவீந்திரன், பரங்கிப்பேட்டை பேரூராட்சி துணைத் தலைவா் முகமது யூனுஸ், அதிமுக முன்னாள் அமைச்சா் செல்வி ராமஜெயம், பாமக மாவட்டச் செயலா் செல்வமகேஷ், விசிக மாவட்ட செயலா் தமிழ்வளவன், மாநில நிா்வாகி பால.அறவாழி, அமமுக மாவட்டச் செயலா் மோகன், கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாஸ்கரன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்டச் செயலா் பாலு மற்றும் ஐயூஎம்எல், மஜக, எஸ்டிபிஐ, தமுமுக, தேமுதிக, வா்த்தக சங்கம், தமிழ்நாடு விவசாய சங்கம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கட்சிகள், சமூக நல அமைப்புகளின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பொதுமக்கள் என திரளானோா் கலந்துகொண்டு ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது என முழக்கங்களை எழுப்பினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments