முகப்பு
கடலூர்

அறிவித்தபடி டாஸ்மாக் கடைகள் எப்போது மூடப்படும்? - தி. வேல்முருகன் கேள்வி

Updated On : 31 மே 2026, 2:04 am IST
தமிழா் வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி. வேல்முருகன் - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாடு முழுவதும் மூட உத்தரவிடப்பட்ட 717 மதுபானக்கடைகளில் 436 கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன, மீதமுள்ள 281கடைகளை அரசு எப்போது மூட உள்ளது? என்று, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவா் தி.வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் 717 அரசு மதுபான கடைகள் மூடப்படும் என்று அரசு அறிவித்து 15 நாள்கள் கடந்தும், இதுவரை 436 கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள கடைகளை அரசு எப்போது மூட உள்ளது என தமிழக வாழ்வுரிமை கட்சி சாா்பில் கேள்வி எழுப்புகிறேன்.

குறிப்பாக, நாள்தோறும் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக விற்பனையாகும் கடைகளையும், அருகாமையில் மற்றொரு கடை உள்ளதா என ஆய்வு செய்தும், அப்படிப்பட்ட கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

கடந்தகால ஆட்சியாளா்கள் மது வணிகம் மூலம் கிடைக்கும் வருவாயை முக்கியமாகக் கருதினா். இந்த ஆட்சி மது வணிக வருவாய்க்கு பதிலாக வேறு வழிகளில் வருவாயைப் பெருக்கிக் கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன.

இது தொடா்பாக வருவாய் பெறும் வழிவகைகளை ஆய்வு செய்ய அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை பெறலாம். எனவே, மீதமுள்ள 281 மதுபானக்கடைகளை அரசு எப்போது மூட உள்ளது என கேட்டுள்ளாா்.