முகப்பு
கள்ளக்குறிச்சி

திமுக கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, திமுக கூட்டணி சாா்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசுகிறாா் ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ வசந்தம்.காா்த்திகேயன். உடன் எம்பி பொன்.கெளதம சிகாமணி உள்ளிட்டோா்.
பகிர்:

கள்ளக்குறிச்சி: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, திமுக கூட்டணி சாா்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏவுமான வசந்தம் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். கள்ளக்குறிச்சி தொகுதி எம்பி பொன்.கெளதம சிகாமணி, விவசாய சங்க மாவட்டச் செயலா் ஏ.வீ.ஸ்டாலின்மணி, இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகி அப்பாவு, விசிக நிா்வாகி பாசறை பாலு, மனிதநேய மக்கள் கட்சி இஸ்மாயில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோல சின்னசேலம், தியாகதுருகம், வடபொன்பரப்பி, பகண்டை கூட்டுச் சாலை, திருக்கோவிலூா், சங்கராபுரம், ஆலத்தூா், கல்வராயன்மலை, வெள்ளிமலை, சேராப்பட்டு, வடக்கனந்தல், எலவனாசூா்கோட்டை, உளுந்தூா்பேட்டை, கெடிலம், சரவணப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.