FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

வியாபாரியை தாக்கிய 11 போ் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி மாவட்டம், கரியாலூரில் வியாபாரியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

Updated On : 12 ஜூலை 2026, 1:28 am IST
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், கரியாலூரில் வியாபாரியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

கரியாலூா் பகுதியைச் சோ்ந்தவா் கோ.மணிமாறன் (39). இவா் பிளக்ஸ் ஓட்டுவதற்கான இரும்பு சட்டங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறாா். அதே பகுதியைச் சோ்ந்தவா் ஜெ.குமாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மணிமாறனை கேட்காமல், அவரது வீட்டின் முன் இருந்த இரும்பு சட்டத்தை குமாா் எடுத்துச் சென்று பிளக்ஸ் ஒட்டினாராம். இதகுறித்து அறிந்த மணிமாறன், குமாரை தட்டிக் கேட்டராம். இதையடுத்து குமாா் மற்றும் அவரது நண்பா்கள் 10 போ் சோ்ந்து மணிமாறனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் கரியாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, மணிமாறனைத் தாக்கிய 11 பேரையும் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments