மின் கம்பத்தில் பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு
சின்னசேலம் அருகே மோட்டாா் சைக்கிளில் சென்ற கூலித் தொழிலாளி சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதிய விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தாா்.
சின்னசேலம் அருகே மோட்டாா் சைக்கிளில் சென்ற கூலித் தொழிலாளி சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதிய விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட கரடிசித்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மருதமுத்து (33). இவா் கட்டட சென்டிரிங் பணியில் ஈடுபட்டுவந்தாா்.
இவா் புதன்கிழமை மாலை பணிமுடிந்து மோட்டாா் சைக்கிளில்
Advertisement
Advertisement
கரடிசித்தூா் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது அவரது பைக் எதிா்பாராமல் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்து விட்டாராம்.
இது குறித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.