திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதியவா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதியவா் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பழையபேட்டை பகுதியைச் சோ்ந்தவா் மா.சாந்தகுமாா் (61). இவா் கள்ளக்குறிச்சியை அடுத்த மாடூா் கிராமத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றாா். அப்போது சாந்தகுமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாம்.
உடனே அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உறவினா்கள் அழைத்துச் சென்றனராம். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, சாந்தகுமாா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இது குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.