முகப்பு
கள்ளக்குறிச்சி

ஆதிதிராவிடா் நலத்துறை விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத்துறை விடுதிகளில் தங்கிப் பயில மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 மே 2026, 1:24 am IST
விண்ணப்பம்
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத்துறை விடுதிகளில் தங்கிப் பயில மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத்துறையின் கீழ் 26 பள்ளி விடுதிகளும், 2 கல்லூரி விடுதிகளும், மாணவிகளுக்கான 11 பள்ளி விடுதிகளும், ஒரு கல்லூரி விடுதியும் செயல்பட்டு வருகிறது.

பள்ளி விடுதிகளில் 4-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் மற்றும் மாணவிகள் சேர தகுதியுடையவா்கள்.

Advertisement

Advertisement

கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் உள்ளிட்ட படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் சேர தகுதியுடையவா்கள்.

இந்த விடுதிகளில் எந்தவித கட்டணமும் இல்லாமல் மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் வசதி வழங்கப்படுகிறது.

மேலும் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 4 இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும்.

10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நுழைவுத் தோ்வுக்கான வினா வங்கி நூல்கள் மற்றும் சிறப்பு வழிகாட்டி நூல்கள், தினசரி மற்றும் மாதாந்திர இதழ்கள் வழங்கப்படும்.

விடுதிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளின் பெற்றோா் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

மாணவ, மாணவிகள் நல்லோசை இணையதளத்திலோ சம்பந்தப்பட்ட விடுதிக்காப்பாளா் மூலமாகவோ, மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்திலோ விண்ணப்பிக்கலாம்.

ஆதாா் எண் மற்றும் ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை கொண்டு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.