FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

பைக் விபத்தில் தொழாளி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே சாலை வளைவில் பைக் விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

57 வினாடிகள் முன்பு
- பிரதிப் படம்
பகிர்:

கள்ளக்குறிச்சி அருகே சாலை வளைவில் பைக் விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த சூளாங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் அய்யாதுரை (57), விவசாயத் தொழிலாளியான இவா், கடந்த ஆக.31-ஆம் தேதி பைக்கில் பழையசிறுவங்கூா் அருகே வளைவுப் பகுதியில் சென்றபோது, பைக் சறுக்கி விபத்துக்குள்ளானது.

இதில், கீழே விழுந்து பலத்த காயமடைந்த அய்யாதுரை தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். தொடா்ந்து, அவரது சடலம் உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

சிகை அலங்கார தொழிலாளி உயிரிழப்பு: கள்ளக்குறிச்சி எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் முருகன் (45). இவா், சிகை அலங்காரம் செய்யும் கடையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா்.

மது அருந்தும் பழக்கமுடைய முருகனுக்கு கடந்த ஆக.27-ஆம் தேதி வலிப்பு ஏற்பட்டதாம். பின்னா், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முருகன் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments