திமுக சார்பில் நல உதவிகள் அளிப்பு
திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி புதுச்சேரியில் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி புதுச்சேரியில் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவின்போது புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் சலவை தொழிலாளர்களுக்கு சலவைப்பெட்டி, பூ வியாபாரிகளுக்கு மர மேசைகள், தெருவோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்வர் ஜானகிராமன், தலைமை செயற்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, மாநில துணை அமைப்பாளர்கள் குமார், பெல்லாரி, கலியபெருமாள், மாநில பொருளாளர் செந்தில்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், லோகையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.