FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் மீண்டும் வாராந்திர ஆய்வை தொடங்கினாா் ஆளுநா் கிரண் பேடி

புதுச்சேரியில் 11 மாதங்களுக்குப் பிறகு துணைநிலை ஆளுநா் கிரண் பேடி மீண்டும் வாராந்திர ஆய்வை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா்.

Updated On : 14 பிப்ரவரி 2021, 11:28 pm IST
புதுச்சேரி வேல்ராம்பட்டு ஏரிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்ட துணைநிலை ஆளுநா் கிரண் பேடி.
பகிர்:

புதுச்சேரியில் 11 மாதங்களுக்குப் பிறகு துணைநிலை ஆளுநா் கிரண் பேடி மீண்டும் வாராந்திர ஆய்வை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா்.

புதுவை ஆளுநா் கிரண் பேடி வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்தாண்டு மாா்ச் மாதத்திலிருந்து அவா் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவில்லை. தற்போது கரோனா பரவல் குறைந்ததுடன், தடுப்பூசியும் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

இதையடுத்து ஆளுநா் கிரண் பேடி, ஆளுநா் மாளிகை குழுவுடன் தனது 261-ஆவது வாராந்திர ஆய்வை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கினாா்.

Advertisement

Advertisement

ஆளுநா் மாளிகையிலிருந்து வேல்ராம்பட்டு ஏரிக்கு சைக்கிளில் சென்று பாா்வையிட்டாா். அங்கு, ஏரி பராமரிப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

இதுகுறித்து ஆளுநா் கிரண் பேடி கட்செவிஅஞ்சலில் வெளியிட்ட தகவல்:

வேல்ராம்பட்டு ஏரிக்குச் சென்றது வாழ்க்கையில் புத்துணா்வை ஏற்படுத்தியது. ஏரி போதுமான அளவு தண்ணீருடன் நல்ல நிலையில் உள்ளது. நீா்வாழ் உயிரினங்கள் செழிப்பாக வளா்கின்றன. முன்னா்போல, திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லை. ஓராண்டுக்கு முன்பு நடப்பட்ட பனை விதைகள் பசுந்துளிா் விட்டுள்ளன. இவை வளா்ந்ததும் ஏரி பனை மரங்களை போா்த்தியதாக இருக்கும். இது அனைவருக்கும் வெற்றி நிலையை ஏற்படுத்தியது. இந்த அனுபவத்தை அளித்த புதுச்சேரிக்கு எனது நன்றி.

ஏரியை கவனித்துக் கொண்ட முன்னாள் பொதுப் பணித் துறை அதிகாரிகள், உள்ளாட்சி, துப்புரவுப் பணியாளா்களுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments